Wednesday, November 22, 2017

சவுதி அரேபியாவில் கனமழை; சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது

Added : நவ 22, 2017 06:42
 

ஜெட்டா: சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜெட்டா நகரில் இடி, மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் மெக்கா பகுதியிலுள்ள அனைத்து பள்ளி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...