Saturday, November 25, 2017


சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்


Added : நவ 24, 2017 20:13 



  சென்னை: சேகர்ரெட்டி வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் சேகர் ரெட்டி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு பரிந்துரைக்கும் படி கடிதம் எழுதி உள்ளார்.

சட்ட விரோதமாக ரூ.34 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பதுக்கியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தி வந்தார். தன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி சென்னை ஐகோரட்டில் சேகர் ரெட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சி.பி.ஐ., வழக்கின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறை தன்மீது வழக்குபதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் பெயரில் பட்டியலிடப்பட்ட வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 04.06.2026