Wednesday, November 1, 2017


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

கார்த்திக்.சி

கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த மூன்று நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. முக்கியமாக சென்னை மாவட்டம் மிதக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்த ஒரு நாள் மழைக்கே ஆங்காங்கு மழை வெள்ளம் தேங்கியது.



சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததாலும், சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் இருந்ததாலும் மழைநீர் தேங்கி போக்குவரத்தை முடக்கியது. அதனால், கடந்த இரு தினங்களாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

news today 23.10.1024