Monday, November 20, 2017

சென்னை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் பள்ளம்: வாகனங்கள் செல்ல அனுமதியில்லை

Published : 19 Nov 2017 20:59 IST

சென்னை

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணியால் பள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துவிட்ட பிறகே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எதனால் பள்ளம் ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. ஆய்வுக்குப் பிறகே அது தெரியவரும்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...