Sunday, August 5, 2018

மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்: கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து



 

 தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 04:15 AM

சூரமங்கலம்,

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66602) மற்றும் சேலத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66603) 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நாளை மறுநாள் மற்றும் 8-ந் தேதிகளில் ஆழப்புலா-தன்பாத்(வண்டி எண் 13352) எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை, திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும்(வண்டி எண் 12678) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவை-திருப்பூர் ரெயில் நிலையம் இடையே 40 நிமிடம் நின்று செல்லும்.

11-ந் தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12676) கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1 மணி நேரம் நின்று செல்லும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12244) கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 40 நிமிடம் நின்று தாமதமாக செல்லும்.

12-ந் தேதி பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 22644) ஜோலார்பேட்டை-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். இந்த பணிகள் காரணமாக 22-ந் தேதி வரை முக்கிய ரெயில்கள் குறிப்பிட்ட இடங்களில் நின்று செல்லும்.இந்த தகவலை சேலம் கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...