Wednesday, August 1, 2018

குருவாயூர் ரயில் தாமதம்

Added : ஆக 01, 2018 00:10 | 

  நாகர்கோவில்: கேரள மாநிலம், குருவாயூரில் இருந்து, சென்னை செல்லும் விரைவு ரயில் நேற்று காலை, ஐந்து மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணியர் சிரமப்பட்டனர்.குருவாயூர் -- சென்னை இடையே ஓடும் விரைவு ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு தினமும் அதிகாலை, 5:30 மணிக்கு வந்து, 5:55 மணிக்கு புறப்படும். நேற்று காலை இந்த ரயில், 10:30 மணிக்கு வந்து, 11:00 மணிக்கு புறப்பட்டு சென்றது. காலை நேரத்தில் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை செல்லும் பயணியரும், சென்னை செல்ல வேண்டிய பயணியரும் சிரமப்பட்டனர்.கேரளாவில் மழை மற்றும் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணத்தால் தாமதம் ஏற்பட்டதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024