Thursday, October 20, 2016

துபாய், சிங்கப்பூர், மலேஷியாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா துவக்கம்

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், துபாய், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு, சிறப்பு விமான சுற்றுலா பயண திட்டங்களை அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., என்கிற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், ரயில்கள் மூலம் சிறப்பு சுற்றுலா பயண திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது, விமானம் மூலம், வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.
 சென்னையிலிருந்து, துபாய், அபுதாபிக்கு, நான்கு நாட்கள் சுற்றுலா: விமானம், டிச., 7ல் புறப்படும். ஒருவருக்கு, 56 ஆயிரத்து, 300 ரூபாய் கட்டணம் மலேஷியா, சிங்கப்பூர், ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கான விமானம், நவ., 26ல், புறப்படும். ஒருவருக்கு, 71 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணம் இலங்கையில், ராமாயணம் மற்றும் கதிர்காமம் யாத்திரை, ஏழு நாட்கள் சுற்றுலா: விமானம், நவ., 19ல் புறப்படும். ஒருவருக்கு, 47 ஆயிரத்து, 700 ரூபாய் கட்டணம். இக்கட்டணத்தில், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, நுழைவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி மற்றும் விசா அடங்கும்

 மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிறப்பு பிரிவை, 90031 40681 என்ற மொபைல் எண்ணிலும், www.irctctourism.com என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...