Saturday, March 18, 2017

பொறியியல் படித்த 60% பேருக்கு வேலையில்லை!


பொறியியல் படித்த மாணவர்களில், ஆண்டுக்கு சுமார் 60 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று அகில இந்திய தொழில்நுட்பப் படிப்புக் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. NBA-வில் அனுமதிபெற்று, சுமார் 3,200 பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ளன. மேலும், ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் மாணவர்கள் வீணடிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

பொறியியல் படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்தத் தேர்வுகள், தேசியத் தேர்வு ஆணையத்தின் கீழ் நடைபெறும் என்று தெரிகிறது. இந்தத் தகுதித் தேர்வு 2018-ம் ஆண்டு ஜனவரி, மார்ச், மே மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை நடத்துவதன்மூலம் வேலை பெறுபவர்கள் உடனடியாக 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...