Saturday, July 1, 2017

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களை பாதுகாக்க புதிய இணையதளம்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:33

சிவகங்கை, வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதுகாக்க புதிய இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
வேலை, தொழில் செய்ய, கல்வி கற்க போன்றவைக்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சவுதிஅரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர். 
போலி ஏஜன்ட்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது, கொத்தடிமையாக இருப்பது, பணி செய்யும் இடங்களில் பிரச்னை, மீனவர்களை சிறைப்பிடிப்பு, ஆவணங்களை தொலைத்தல், உள்நாட்டு போர் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் வெளிநாடுகளில் கொலையான மற்றும் இறந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கு உறவினர்கள் சிரமப்படுகின்றனர். 
மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகங்கள் மூலம் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பதற்கும் தாமதம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் 
www.madad.gov.in என்ற புதிய இணையதளத்தை துவங்கியுள்ளது. இதில் வெளிநாடுகளில் வசிப்போர், தாங்கள் பாதிக்கப்படும்போது அங்கிருந்த படியே புகார் தெரிவிக்கலாம். 

மேலும் வெளிநாடுகளில் மாயமான, இறந்துபோன உறவினர்கள் குறித்தும் தெரிவிக்கலாம். இந்த புகார் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...