Saturday, July 1, 2017

தக்காளி விலை கிடு கிடு உயர்வு

தக்காளி விலை ரூ.100 : டில்லியில் 'கிடுகிடு' உயர்வு

பதிவு செய்த நாள்

30ஜூன்
2017 
23:46

புதுடில்லி: வட மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, வரத்து குறைவு காரணமாக, டில்லியில் ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இவ்வார துவக்கத்தில், டில்லியில் சில்லரை விற்பனை கடைகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை, 80 ரூபாய் வரை உயர்ந்தது. இரு தினங்களில், 100 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆசாத்பூர் காய்கறி மண்டி வியாபாரிகள் கூறியதாவது: தக்காளி விளையும் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின், தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் விற்பனை செய்யப்படும் தக்காளி ஹரியானா மாநிலத்தில் இருந்து வருகிறது. தினமும், 100 லாரிகள் வருவதற்கு பதில், 60 லாரிகளே வருவதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...