Tuesday, August 15, 2017

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது : இங்கே அறியலாம்!

By DIN  |   Published on : 14th August 2017 04:58 PM
rains5

சென்னை: தமிழகத்தில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் வெளுத்து வாங்கினாலும், புறநகர்ப் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தேனி, ஆண்டிப்பட்டி கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்டிப்பட்டியில் கன மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதே போல, திருப்பூர், அவிநாசி, கைகாட்டி புதூர், சூளை, மங்களம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு,  வேளாங்கண்ணி, கீழையூர், திருக்குவளை, வாழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையைச் சுற்றியுள்ள தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பட்டாபிராம், ஒரகடம், மணிவாக்கம், முடிச்சூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், சிவகிரி, பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக, திருவண்ணாமலை, திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம், குன்னத்தூர், பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி, காங்கேயம், பள்ளக்கௌண்டன்பாளையம் பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...