Thursday, February 1, 2018

கும்பகோணம் மாசிமக விழா; மார்ச் 1ல் தீர்த்தவாரி

Added : பிப் 01, 2018 02:52

தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், மாசிமக விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும், மகாமக விழா சிறப்புடையது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தில், மகம் நட்சத்திரம், பவுர்ணமியன்று, மாசிமக விழா நடைபெறுவது வழக்கம்.

அன்று மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையம்மன் தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி, ஏராளமானோர் புனித நீராடுவர்.
இத்தகைய சிறப்பு பெற்ற மாசிமக விழாவை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் முன்புறமுள்ள தேருக்கு, 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின் முகூர்த்தகாலுக்கு அபிஷேகங்கள் செய்து, தேரின் மேல் பந்தக்கால் நடப்பட்டது.
மாசிமக விழா, வரும் பிப்., 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, 20ம் தேதி கொடியேற்றமும், 23ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலாவும், 24ம் தேதி தன்னைத்தானே பூஜித்தல், ஓலைச்சப்பரம், ரிஷப வாகனத்தில் வீதியுலாவும், 27ம் தேதி ஐந்து தேரோட்டமும், மார்ச், 1ம் தேதி முக்கிய விழாவான, தீர்த்தவாரி மகாமககுளத்தில் நடக்கிறது.

நான்கு நாட்கள் நடக்கும்

குருஷேத்ரா விழா, நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பிறமாநில மாணவர்கள், இந்தோனேஷியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மாணவர்கள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான மாணவர் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள், தொழில்நுட்ப தகவல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...