Thursday, February 1, 2018

1975 முதல் வில்லங்க விபரங்களை பார்க்கும் வசதி: பதிவுத்துறை முடிவு

Added : பிப் 01, 2018 00:31

புதிதாக வீடு, மனை வாங்குவோர், 1975 முதல் பதிவான ஆவணங்களை, ஆன் - லைனில் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பதிவுத்துறை தயாராகிவருகிறது. வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் முறையாக நடந்துள்ளதா என்பதை, வில்லங்க சான்று வாயிலாக அறியலாம். இதற்காக, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி சான்றிதழ் வாங்குவதற்கு பதிலாக, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக பார்க்கும் வசதி, 2013ல், அறிமுகமானது. இதன்படி, பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே, பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான பகுதியில், சொத்து குறித்த விபரங்களை அளித்தால், வில்லங்க விபரங்கள், பி.டி.எப்., வடிவில் கிடைக்கும். அதில், தற்போதைய நிலவரப்படி, 1987 முதல் பதிவான, பரிமாற்ற விபரங்களை மட்டுமே, ஆன் லைன் முறையில் பார்க்கவும், பிரதி எடுக்கவும் முடியும். அதற்கு முந்தைய விபரங்கள் தேவைப்படுவோர், வழக்கமான முறையில், கட்டணம் செலுத்தி பெற வேண்டும். தற்போது, இதற்கு தீர்வு காணும் வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் வில்லங்க சான்று சரி பார்ப்பு வசதியில், 1975 முதல், பத்திரப்பதிவு விபரங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது. அத்துடன், ஸ்கேன் செய்து, பதிவுத்துறை தொகுத்துள்ள பத்திரங்களின் விபரங்களையும், பொது மக்கள் இலவசமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...