Thursday, October 4, 2018


குரு பார்க்க கோடி நன்மை இன்று குருபெயர்ச்சி]

Added : அக் 04, 2018 02:32





நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் துலாம் ராசியில் இருந்து இன்று இரவு 10:05 மணிக்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடித்திட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி அருகே உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் அருகே தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணா மூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம், ஆராதனை நடக்கும்.இந்த பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு நற்பலனும், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு சுமாரான பலனும் உண்டாகும். மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் பரிகாரமாக குரு பகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்தேவனாம்ச ரிஷிணாம்சகுரும் காஞ்சன ஸந்நிபம்!புத்தி பூதம் த்ரிலோகேசம்தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!

பொருள்: தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போலபிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம்.

இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் 12 முறை படித்தால் குருவருளால் குறையனைத்தும் தீரும். கோடிநன்மை சேரும்.

1 comment:

NEWS TODAY 25.09.2024