Thursday, December 20, 2018


குழந்தைக்கு ஹிட்லர் பெயர் வைத்த பெற்றோருக்கு சிறை

Added : டிச 20, 2018 01:45 



லண்டன் : பிரிட்டனில் தங்களின் குழந்தைக்கு ஹிட்லர் பெயர் வைத்த பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கியவரும், யூத மக்களை அழித்து இனப் படுகொலை செய்தவருமான அடால்ப் ஹிட்லரின் பெயர் இன்றளவும் ஒரு சர்ச்சைக்குரிய பெயராகவே உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் அடம் தாமஸ், கிளாடியா பெட்டாதஸ் தம்பதி தங்கள் குழந்தைக்கு அடால்ப் என்று பெயர் வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு ஆளாகினர்.

இந்த தம்பதி பிரிட்டனின் சட்டதிட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், மேலும் அவர்கள் பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு அடால்ப் என்ற பெயரிட்டுள்ளாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் ஹிட்லரின் கருத்துகளில் ஆர்வம் கொண்டு யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும், அனைத்து யூதர்களும் மரணத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கூறிவந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கிளாடியாவுக்கு ஐந்து ஆண்டு, தாமசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...