Saturday, July 1, 2017

Train News

ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் ரெடி:விரைவில் திறப்பதால் பயணிகள் குஷி!

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:14

கோவை;கோவை ரயில்வே ஸ்டேஷனில், 1ஏ பிளாட்பார்ம் செல்வதற்காக பொருத்தப்பட்டுள்ள இரண்டு எஸ்கலேட்டர்கள், நாளை முதல் பயன்பாட்டு வருவதால் பயணிகள் 'குஷி' அடைந்துள்ளனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் நின்று செல்லும், 72 ரயில்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள பிரதான நுழைவாயில், மிகவும் குறுகலாக இருப்பதுடன், செங்குத்தான படிகளைக் கொண்டதாக உள்ளது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருவோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பிளாட்பார்ம் செல்வது மிகப்பெரும் கஷ்டமாகவுள்ளது.
இவர்கள் அனைவரும், பிளாட்பார்ம்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரண்டு 'லிப்ட்'கள் நிறுவுதல், ஸ்டேஷன் நுழைவாயிலில் இருந்து, 1ஏ பிளாட்பார்மிற்கு பயணிகள் செல்ல ஏதுவாக இரு எஸ்கலேட்டர்கள் அமைத்தல் போன்ற பணிகள் கடந்தாண்டு அக்., முதலே நடந்து வருகின்றன. இதில், 'லிப்ட்'கள் அமைக்கும் பணி முடிந்தபாடில்லை.ஆனால், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் இரு எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. நாளை முதல் இந்த எஸ்கலேட்டர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ள இவ்விரு எஸ்கலேட்டர்களை மத்திய ரயில்வே அமைச்சர் துவக்கிவைக்கிறார். பணிகள் முழுமையடைந்து உள்ளதால், தற்போது சோதனை ஓட்டம் நடத்தி சரி பார்த்துள்ளோம்; இரு எஸ்கலேட்டர்களும் சிறப்பாக இயங்குகின்றன,' என்றார்.
ஏற்கனவே, இங்குள்ள இரண்டாவது சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள எஸ்கலேட்டர்கள், பெரும்பாலும் இயங்குவதே இல்லை; அதேபோல, இதையும் பெயருக்குத் துவக்கி விட்டு, சில நாட்களில் நிறுத்தி விடக்கூடாது என்பதே கோவை மக்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...