Wednesday, October 4, 2017

இதே நாளில் அன்று
பதிவு செய்த நாள்03அக்
2017
20:39




1904 அக்டோபர் 4

திருப்பூர் குமரன், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள, செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுாரில், நாச்சிமுத்து -- கருப்பாயி தம்பதிக்கு மகனாக, 1904 அக்., 4ல் பிறந்தார். வறுமையால், பள்ளிப் படிப்பை, ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார்.காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். 1932ல் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் துவங்கிய போது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது.திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த, மறியலில் பங்கேற்றார். 1932 ஜன., 10ல் கையில் தேசியக் கொடி ஏந்தி, தொண்டர் படைக்கு தலைமை ஏற்று, அணிவகுத்து சென்றார். அப்போது, காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில், ஜன., 11ல் அவர் இறந்தார். கொடிக்காத்த குமரன் என, அனைவராலும் போற்றப்படும் அவரின் பிறந்த தினம், இன்று.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024