Wednesday, October 4, 2017

வங்கிகளில், 'ஆதார்' இணைப்பு மையங்கள் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு

பதிவு செய்த நாள்03அக்
2017
20:13

வங்கிகளில், 'ஆதார்' இணைப்பு மையங்கள் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு

வங்கிக் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, வங்கிக் கிளைகளில், சிறப்பு முகாம்கள் செயல்பட துவங்கி உள்ளன.

70 சதவீதத்தினர் : 'வங்கிக் கணக்கு மூலமே, மத்திய, மாநில அரசுகளின் மானியம், முதியோர் பென்ஷன், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை என, அனைத்து பண பலன்களும் வழங்கப்படுவதால், ஒவ்வொருவரும், ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள், முதியோர் பென்ஷன் பெறுவோர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிவோர் என, வங்கிக் கணக்கை சார்ந்துள்ள அனைத்து தரப்பினரும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கின்றனர். ஆனால், 60 - 70 சதவீத, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே, இதுவரை, ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய, மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது.

பத்துக்கு ஒன்று : தொடர்ச்சியாக, வங்கிக் கிளைகள் சார்பில், சிறப்பு இணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டந்தோறும் செயல்படும் வங்கிகள், தங்களது, 10 கிளைகளுக்கு, ஓர் இணைப்பு மையம் அமைத்துள்ளது. மையத்தில், எந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளரும் சென்று, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள லாம்; இணைப்பு விபரம், அப்போதே உறுதி செய்யப்படும்.
நேற்று முதல், இந்த மையங்கள் செயல்பட துவங்கி உள்ளன. மையங்களின் செயல்பாடுகளை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து, பதிவு செய்ய வேண்டும் எனவும், வங்கிகளின் தலைமையகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

- நமது நிருபர் -டுவதால், ஒவ்வொருவரும், ஆதார் எண்ணை, வங்கிக் கணக்கில் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள், முதியோர் பென்ஷன் பெறுவோர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிவோர் என, வங்கிக் கணக்கை சார்ந்துள்ள அனைத்து தரப்பினரும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கின்றனர். ஆனால், 60 - 70 சதவீத, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே, இதுவரை, ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய, மத்திய அரசுதிட்டமிட்டு உள்ளது.

பத்துக்கு ஒன்று : தொடர்ச்சியாக, வங்கிக் கிளைகள் சார்பில், சிறப்பு இணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டந்தோறும் செயல்படும் வங்கிகள், தங்களது, 10 கிளைகளுக்கு, ஓர் இணைப்பு மையம் அமைத்துள்ளது. மையத்தில், எந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளரும் சென்று, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள லாம்; இணைப்பு விபரம், அப்போதே உறுதி செய்யப்படும்.
நேற்று முதல், இந்த மையங்கள் செயல்பட துவங்கி உள்ளன. மையங்களின் செயல்பாடுகளை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து, பதிவு செய்ய வேண்டும் எனவும், வங்கிகளின் தலைமையகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC urges cash limit for govt servants

HC urges cash limit for govt servants  K.Kaushik@timesofindia.com 30.08.2026 Madurai: Madras high court has sought a response from the state...