Wednesday, October 4, 2017

சென்னை,திருவள்ளூர்,வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
பதிவு செய்த நாள்
அக் 03,2017 20:11



சென்னை: சென்னை, திருவள்ளூர் , செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநின்றவூர், கோடம்பாக்கம், சூளைமேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்துார் , தாம்பரம், வண்டலுார், அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி,பெருங்களத்துார்,பொழிச்சலுார், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.மழை காரணமாக ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு,வேங்கல் கூட்ரோடு.தாமரைப்பாக்கம், ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

வேலூர் மாவட்டத்தில் வேலூர்,காட்பாடி, சத்துவாச்சாரி, பொய்கை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024