Wednesday, October 4, 2017

இருள் சூழ்ந்த வண்டலூர் -- கேளம்பாக்கம் சாலை

பதிவு செய்த நாள்03அக்
2017
23:26

வண்டலுார்;வண்டலுார் கேளம்பாக்கம் சாலையில், விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை அமைந்துள்ளது.இச்சாலையில், ஏராளமான கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன.

மேலும், மாமல்லபுரம், புதுச்சேரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வோரும், இச்சாலையையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துகளும் நடப்பதால், இச்சாலையில் விளக்குகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...