Wednesday, October 4, 2017

100 வயது நிரம்பியவருக்கு 2 மடங்கு ஓய்வூதியம்
2017-10-04@ 01:43:33

தஞ்சை: தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சீதாராமன். இவர் கடந்த 1917 செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி இறுதியாக நிலவரித் திட்ட அலுவலராக 1973ல் ஓய்வு பெற்றார். இவருக்கு கடந்த செப்டம்பர் 27ம் தேதி 100 வயது நிரம்பியது. இதையடுத்து அவருக்கு செப்டம்பரில் 2 மடங்கு ஓய்வூதியம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கருவூலத்தில் நடந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் சீதாராமனுக்கு 100 சதவீத கூடுதல் ஓய்வூதியத்திற்கான ஆணையை மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024