Friday, November 10, 2017


ரூ.1.50 கோடி மோசடி : போலி அதிகாரி மீது புகார்


சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.50 கோடி ரூபாய் மோசடி செய்த போலி அதிகாரி குறித்து, அரசு ஊழியர்கள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம், தும்பலை சேர்ந்தவர் சசிகுமார், 41; இவர், சென்னையில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையில் இயக்குனராக உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளில், வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் கூறி உள்ளார்.
இதை நம்பி, அரசு ஊழியர்கள் பலர், தங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்காக, ஐந்து முதல், 20 லட்சம் ரூபாய் வரை, சசிகுமார் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்களிடம், 2016 செப்டம்பரில் வழங்கி உள்ளனர்.
ஆனால், சசிகுமார், வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. அவரிடம் ஏமாந்த, 20 பேர், சசிகுமார், 1.50 கோடி ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டதாக, எஸ்.பி., ராஜனிடம் நேற்று புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.05.2026