Saturday, October 20, 2018


திருவடிசூலம் கோவிலில் கவர்னர் வழிபாடு

Added : அக் 20, 2018 04:12

செங்கல்பட்டு: திருவடிசூலத்தில், கருமாரியம்மனுக்கு, வெள்ளி கவசம் அணிவிக்கும் விழாவில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார். செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் கோவில்புரத்தில், ஆதி பரமேஸ்வரி ஆரண்ய ஷேத்திரத்தில், 51 அடி உயர கருமாரியம்மன், வெங்கடேச பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு, நவராத்திரி திருவிழாவிவை ஒட்டி, கொலு வைத்திருந்தனர்.அதை தொடர்ந்து, நவராத்திரி திருவிழா மற்றும் கருமாரியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு விழா, மதுரை முத்துசாமி தலைமையில், நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024