Wednesday, November 9, 2016

500 மற்றும் 1000 நோட்டுகள் தடை: 5 முக்கிய அம்சங்கள்


நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அரசு பஸ்கள், ரயில் நிலை யங்கள், விமான நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட் ரோல் பங்க்குகள், அரசு பால் பூத்துகள், தகன எரிமேடைகள் அடக்க ஸ்தலங்களில் அடுத்த 72 மணி நேரத்துக்கு இந்த நோட்டு கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

* இந்த நோட்டுகளை ரூ.4,000 வரைவங்கி மற்றும் அஞ்சல கங்களில் உரிய அடையாள அட் டையை காண்பித்து வரும் 24-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். இந்த நோட்டு களை அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகளில் நாளை முதல் டிசம்பர் 30 வரை உச்ச வரம் பின்றி டெபாசிட் செய்யலாம்.

* இன்று வங்கிகள் செயல் படாது. ஏடிஎம்கள் இன்றும் நாளையும் செயல்படாது. ஏடிஎம் களில் முதல் சில நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை எடுக்கலாம். பின்னர் இது ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* வங்கிகளில் இருந்து சில நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரமும், வாரத்துக்கு 20 ஆயிரம் வரையிலும் எடுக்கலாம். பின்னர் இத்தொகை படிப்படியாக உயர்த்தப்படும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு, காசோலை, டிடி பரிவர்த்தனைக்கு தடையில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024