Monday, November 21, 2016

'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை?!' மதன் பிடிபட்ட நிமிடங்கள்

''எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை?!' மதன் பிடிபட்ட நிமிடங்கள் :'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம். மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர். வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர். சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார். இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள். மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார். எஸ்.மகேஷ் Dailyhunt

:'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம்.
மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.
துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர்.
வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர்.
சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார்.
இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள்.
மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார்.
எஸ்.மகேஷ்
Dailyhunt
:'எனக்கா இந்த உலகத்தில் இடமில்லை' என்று மதன் சொன்ன தகவல், போலீஸாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 6 மாதம் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் சுற்றித் திரிந்த மதன், தமிழகத்துக்கு வந்த போது போலீஸிடம் சிக்கிக் கொண்டார். மதனை, ஒரு வீட்டின் அறையில் பதுங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கு எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த வழக்கு ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வரும்போது மதன், சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தோம். முதலில் நீதிமன்றம், போலீஸாரின் விசாரணையை பாராட்டியது. மாதங்கள் கடந்த நிலையில் மதனை பிடிக்க முடியவில்லை என்றதும் நீதிமன்றம் எங்களுக்கு காலக்கெடு விதித்தது. இதனால் மதன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினோம்.
மதனின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் செல்போன் நம்பர்களை கண்காணித்தோம். மேலும், மதனுக்கு யார் மூலம் பண சப்ளை செய்யப்படுகிறது என்றும் ஆராய்ந்தோம். அப்போது மதனின் மனைவியின் உறவினரான ஒரு பெண் மூலம் பண சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த காலக்கட்டத்தில் மதன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு பண்ணை வீடுகள் வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதனால் அந்த வீடுகள் வாங்கிய விவரங்களை சேகரித்தோம். அப்போதுதான் மதன், திருப்பூரில் உள்ள உறவினர் பெண்ணை சந்திக்க வரும் தகவல் தெரியவந்தது. உடனடியாக மதனை கைது செய்ய 'ஆபரேசன் எம்' வகுக்கப்பட்டது. இந்த தகவல் திருப்பூரில் உள்ள நுண்ணறிவு போலீஸாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உயரதிகாரிகளுக்கும், தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும்.
துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் இரண்டு உதவி கமிஷனர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு விரைந்தனர். அவர்கள், திருப்பூர், பூண்டி பாலத்தின் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டை சுற்றி முகாமிட்டனர். சரியாக நேற்று மாலை தாடியுடன் மதன், நடந்து வந்தார். அதை போலீஸார் நோட்டமிட்டதோடு, மதனை பின்தொடர்ந்தனர்.
வீட்டிற்குள் மதன், சென்றதும் உடனடியாக போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் மதன் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். துப்பாக்கி முனையில் போலீஸார் வீட்டை சுற்றி வளைத்ததும் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளையும் போலீஸார் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் மதனை காணவில்லை. இதனால் பின்வழியாக மதன், தப்பிச் சென்று விட்டாரா என்ற சந்தேகமும் தனிப்படை போலீஸாருக்கு எழுந்தது. இருப்பினும், போலீஸார் ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதன், பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் மதன், அப்படியே கையை உயர்த்தி சரண் அடைந்து விட்டார். அவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்த போலீஸார், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மதன், பிடிப்பட்டதும், உடனடியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. உடனே ஜார்ஜிம், வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தகவல் டி.ஜி.பிக்கும் சொல்லப்பட்டது. மதன், பிடிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கும்படி தனிப்படை டீம்க்கு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக அவர்களும் உயரதிகாரிகள் இரண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனர்.
சென்னைக்கு அழைத்து வரும் போது மதனிடம், இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே, 'எனக்காக இந்தவூலகத்தில் இடமில்லை. எனக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அங்கேதான் தங்கியிருந்தேன். சமீபத்தில் சென்னைக்கு கூட ஒரு முறை வந்து சென்றேன்' என்று சொன்னதும் போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதன், தலைமறைவாக இருந்த நாட்களில் வடமாநிலங்களில்தான் அதிக காலங்கள் இருந்துள்ளார். அவர் எழுதிய கடிதம் குறித்து போலீஸார் கேட்ட போது, அந்தசமயத்தில் அப்படி எழுதினேன். கங்கை நதிக்கும் சென்றேன். அங்குள்ள ஓட்டலிலும் தங்கினேன். ஆனால், அதற்குள் என்னுடைய தற்கொலை எண்ணம் மாறி விட்டது. இதனால், ஒவ்வொரு இடங்களாக தலைமறைவாக இருந்தேன். என்னைப் பற்றி வந்த செய்திகள் எல்லாம் எனக்கு தெரியும். அதில் ஒருசில உண்மை, மற்றது எல்லாம் கதைகள். எஸ்.ஆர்.எம். குழுமம் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கு முழுஒத்துழைப்பையும் மதன் கொடுத்துள்ளார்.
இப்போது கூட போலீஸாரின் பிடியில் மதன், சிக்கி இருக்க மாட்டார். அவரது உறவினரான அந்தப் பெண்ணை போலீஸார் தங்களது கஸ்டடியில் எடுத்த தகவல் மதனுக்கு தெரியவில்லை. இதனால் வசமாக அந்த பெண்ணின் பேச்சை நம்பி வந்து சிக்கி கொண்டார் என்றனர் உள்விவரம் தெரிந்த போலீஸ் வட்டாரங்கள்.
மதன் பிடிப்பட்ட தகவலை பகிர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், "மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக மதனை தேடி வந்த சமயத்தில் திருப்பூரில் அவர் வரும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவரது உறவுக்கார பெண்ணின் வீட்டுக்கு வந்த மதனை கைது செய்ய திட்டம் வகுத்தோம். இதற்காக அங்கு ரகசியமாக சென்று மதனை பிடிக்க முடிவு செய்தோம். மதன், அந்த வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அங்கு சென்று சோதனை செய்தோம். அப்போது அந்த பெண், இரண்டு குழந்தைகள் இருந்தனர். மதனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபோதும் மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் பதுங்கு அறைகள் எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக கடப்பாரையைக் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையின் தரைதளத்திலிருந்து சத்தம் வேறுவிதமதாக வந்தது. உடனடியாக அந்த அறையின் தரைதளத்தை உடைத்து பார்த்த போது சிறிய அளவில் ஒரு பதுங்கு குழி இருந்தது. அங்குதான் மதன் பதுங்கி இருந்தார். அவரை உடனே மேலே கொண்டு வந்தோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்ய உள்ளோம்"என்றார்.

எஸ்.மகேஷ்
Dailyhunt

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...