Saturday, November 19, 2016

பழைய நோட்டு மாற்றுவதில் சிக்கல்: வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்பு - பொதுமக்கள் ஏமாற்றம்

விரலில் வைக்க மை வராதது, ரிசர்வ் வங்கியிலிருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று பெரும்பாலான வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதில் சிக்கல் ஏற்பட்டது. பல வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதை யடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வரு ழ்ழ்ணம் மாற்றுவதை தடுப்பதற்காக பணம் எடுப்பவர்களின் விரல்களில் மை வைக்கப்படும் என கடந்த செவ் வாயன்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வங்கிகளுக்கு மை வரவில்லை. இதனால், இத்திட் டத்தை செயல்படுத்துவதில் குழப் பம் நிலவுகிறது.

ரிசர்வ் வங்கி பணம் அனுப்பவில்லை

இந்நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறி விப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-க்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தது. இதைக் கேட்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று அந்த 2 ஆயிரம் ரூபாய் கூட பெரும்பாலான வங்கிகளில் வழங்கப்படவில்லை. பல வங்கி களில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப் பட்டன. ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, “விரலில் வைப்பதற்கான அடையாள மை வராததால் பெரும் பாலான வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டு களை மாற்றித் தரவில்லை. மேலும், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படுகின்றன. இதை வாங்க பொதுமக்கள் மறுக்கின்றனர்.

வங்கி ஊழியர்கள் பாதிப்பு

தொடர்ந்து விடுமுறையின்றி வங்கி ஊழியர்கள் வேலை செய்து வருவதால் பலர் உடல்நலம் பாதிக் கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் வங்கி வாடிக்கையாளர் களுக்கு சேவை வழங்க முடியாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு அவற்றை மாற்றி தரவும் முடிய வில்லை. அத்துடன், மத்திய கூட்டுறவு சங்க வங்கி ஊழியர்களின் போராட் டத்தால் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “விரலில் வைக்க மை வராததால் வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவர்களுக்கு பணம் வழங்கவில்லை. அத்துடன், புதிய 500 ரூபாயும் இதுவரை வரவில்லை. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் பணம் வழங்க முடியவில்லை’ என்றார்.

ரிசர்வ் வங்கியிலும்..

பணம் மாற்றுவதற்கு கைவிரலில் மை, ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே பழைய நோட்டுக்கள் மாற்றப் படும் என்ற அறிவிப்பால் நேற்று ரிசர்வ் வங்கியில் பணம் மாற்றுவோர் எண்ணிக்கை பெரு மளவு குறைந்தது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...