Saturday, November 19, 2016

வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம்: நிதியமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


வங்கிகளில் பணம் மாற்ற வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர் களுக்கு அழியாத மை வைக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 19-ம் தேதி பல்வேறு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் பணம் மாற்றச் செல்லும் வாடிக்கை யாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம். கை விரலில் அழியாத மை வைக்கும் முறை தேர்தலில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பணம் மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...