Wednesday, October 4, 2017

தஞ்சை கோவிலில் சூடு தங்காமல் பக்தர்கள் அவதி
பதிவு செய்த நாள்03அக்
2017
21:49




தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிரகாரத்தை சுற்றி வர தரை விரிப்புகள் இல்லாததால், சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியரும் அழைத்து வரப்படுகின்றனர். கோவிலின் முகப்பு முதல் உட்பிரகாரம் வரை, அனைத்தும் கற்களால் ஆன தரை தளம் கொண்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜராஜன் நுழைவு வாயிலில் துவங்கி, மூலவர் சன்னதி, வாராஹி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம், முருகன் சன்னதி, கருவூரர் சன்னதி என, அனைத்து பகுதிகளுக்கும் நடந்து செல்கின்றனர்.

தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வர வசதியாக, தரைகளில் விரிப்புகள் எதுவும் இல்லை. தரை பகுதி சூடாக இருப்பதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஓட்டமும், நடையுமாக, அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர்.
'கோவில் நிர்வாகம், தரமான விரிப்புகளை பிரகாரம் முழுவதும் விரித்து வைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024