Wednesday, October 4, 2017

பள்ளிபாளையத்தில் பளீச் வெள்ளையில் தயாராகிறது: தீபாவளி ஸ்பெஷல் மோனோ காட்டன் சட்டை: டெய்லரிங் ஆட்கள் பற்றாக்குறை பாதிப்பு
2017-10-04@ 00:06:43




பள்ளிபாளயைம், அக்.4: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தான் பிரதானம். முன்பு துணிகளை மட்டும் நெய்து விற்பனை செய்து வந்தவர்களில் பலர் மதிப்பு கூட்டும் தொழிலில் ஈடுபடுவது அதிகம். ஆயத்த ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது 200க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் பள்ளிபாளையத்தில் செயல்படுகின்றனர். இப்பகுதியில் தைக்கப்படும் வெள்ளை சட்டைகளுக்கு தான் முன்னணி நிறுவனங்கள் விரும்பி கொள்முதல் செய்கின்றன. குழந்தைகளுக்கு பல வகை செக்டு டிசைன் சட்டைகள் தயாரிப்பும் அதிகம்.

இந்தாண்டு தீபாவளிக்கு கலப்பினமில்லாத பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தி மோனோ காட்டன் என்ற பெயரில் பளீர் வெண்மையுடன் வெள்ளை சட்டைகள் தைத்து கொடுக்க பல முன்னணி ஜவுளி கடைகள் ஆர்டர் கொடுத்துள்ளன. அதற்கேற்ற உயர் ரக பஞ்சு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை கொள்முதல் செய்து ஒற்றை கோடு கொண்ட மோனோ காட்டன் சட்ைடகளை தயாரிப்பாளர்கள் தைத்து கொடுத்து வருகின்றனர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ₹200 முதல் மோனோ காட்டன் சட்டைகள் தைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் டெய்லரிங் தொழில் தெரிந்தவர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிபாளையத்தில் மட்டும் தற்போதைக்கு குறைந்தபட்சம் 1500 டெய்லர்கள் முதல் 2ஆயிரம் பேர் தேவைப்படுவர். ஆனால் 30 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்னைகள் தற்போது ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024