Wednesday, October 25, 2017

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம்: வைரமுத்து புகழஞ்சலி
Published : 24 Oct 2017 21:03 IST
சென்னை

ஐ.வி.சசி, வைரமுத்து | கோப்புப் படம்.
திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசியின் மறைவுக்கு கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுச் செய்தி என்னை அதிர வைத்தது.புகழ்மிக்க ஒரு தென்னிந்திய இயக்குநரை இந்திய சினிமா இழந்துவிட்டது.
அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். பாராதிராஜாவின் நிழல்கள் நான் பாட்டெழுதிய முதல் படம் என்றாலும், திரையில் முதன்முதலில் வெளிவந்தது ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய காளி என்ற படமாகும். அந்த வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.
கலையே வாழ்வு; வாழ்வே கலை என்று வாழ்ந்தவர் மறைந்துவிட்டார். மலையாள மண் இந்திய சினிமாவுக்குத் தந்த கலைக் கருவூலத்தைக் காலம் திருடிவிட்டது. அவர் புகழ் இந்திய சினிமாவில் என்றென்றும் வாழும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலை உலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...