Wednesday, October 15, 2014

அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரியை, சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

சிங்கப்பூர் : அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரியை, சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நிமிடங்களில் இந்த பேட்டரி, 70 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்; இது, 20 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றில், லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகளை, அதிகபட்சம், 500 முறை ரீசார்ஜ் செய்ய முடியும்; அல்லது, அதிகபட்சம், 2 - 3 ஆண்டுகள் செயல்படும். அதற்குப் பிறகு புதிய பேட்டரிகளை விலைக்கு வாங்கி பொருத்த வேண்டும். இந்த சிரமங்களை தீர்க்கும் வகையில், சிங்கப்பூர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். இன்னும், 2 - 3 ஆண்டுகளில் புழக்கத்திற்கு வரவுள்ள இந்த பேட்டரி, டைட்டானியம் டைஆக்சைடு என்ற ரசாயன பசையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும்; இரண்டு நிமிடங்களில், 70 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றக் கூடிய இந்த பேட்டரி, அடிக்கடி ரீசார்ஜ் செய்யப்பட வேண்டிய சிரமத்தை பெருமளவு குறைக்கும். இப்போது பயன்பாட்டில் உள்ள லித்தியம் பேட்டரிகளை விட, 10 ஆயிரம் மடங்கு அதிகமாக செயலாற்றும் திறன் கொண்டது; எனினும், விலை அதிகமாகத் தான் இருக்கும்.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...