Wednesday, September 7, 2016

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக ஆதார் எண் உள்ளவர்கள் மட்டும் விவரம் அளித்தால் போதும்: உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Return to frontpage

பொது விநியோக திட்டத்தில் மின் னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக, ஆதார் எண் உள்ளவர் கள் மட்டும் விவரம் அளித்தால் போதுமானது என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அனைவரது ஆதார் எண்ணையும் கேட்டு கட் டாயப்படுத்தக் கூடாது என கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 25,532 முழு நேரம், 9,154 பகுதி நேரம் என மொத்தம் 34,686 ரேசன் கடை கள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளின் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இவை கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அதற் கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய மக்கள் தொகை பதிவின் விவரங்களை பெற்று முதல்கட்ட மாக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண்களை உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரேசன் கடை களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப் படும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகள் முடிந்ததும், பொதுவிநி யோகத் திட்ட பயனாளிகள் விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அதன் பின் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இந்நிலையில், சில பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் விவரங்களை அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மாவட்டம்தோறும் ‘பாயின்ட் ஆப் சேல்’ மின்னணு விவரப் பதிவு இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களுக்கு வழங்கவேண்டி உள்ளது. இதில் பதிவாகும் விவரங்களை சேகரித்து, விவரத் தொகுப்பு தயாரிக்கப்படும். ரேசன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர் அளிக்கும் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் பதிவு இருக்காது. அவர் களுக்கு தேவையில்லை. அவர்கள் பெயர் விவரம் மட்டும் சேர்த் தால் போதுமானது. மேலும், அனைவரது ஆதார் எண் ணும் வேண்டும் என கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆதார் எண் கிடைக்கும்போது, பொதுமக்கள் அதை ரேசன் கடை அலுவலரிடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்கள் இணைக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய மின்னணு அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களில் தற்போது ரேசன் கடை ஊழியர்களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்வது தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை, சென்னை சைதாப்பேட்டை மண்டல பகுதிகளுக்கு நேற்று இயந்திரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப் படியாக இயந்திரங்கள் வழங்கப் பட்டு, ஆதார் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
Keywords: மின்னணு குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளவர்கள், விவரம் அளித்தால் போதும், உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...