Thursday, November 10, 2016

ரூ.500, ரூ.1000 செல்லாது அறிவிப்பால் தேர்தல் பணியில் அதிமுக, திமுக சோர்வு: புதிய உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்


ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, திமுகவினர் தேர்தல் பணியில் சோர்வு காணப்பட்டது. பாஜக வேட்பாளர் வழக்கத்தைவிட உற்சாகமாக நேற்று வாக்கு சேகரித்தார்.

நேற்று முதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிமுக, திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொகுதிக்குள் முகாமிட்டுள்ளனர். இவர்களின் தினசரி செலவு, உள்ளூர் வாசிகளுக்கான செலவு, வாகன எரிபொருள், தங் குமிடம், உணவு என அனைத்து செலவுகளுக்கும் தினசரி ஓரிரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் ரூ.500, 1000 என்றிருந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியினர் தங்களின் தேவை களைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் நேற்று வாக்காளர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்ட வில்லை. 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொகுதியில் இருந்து வெளியேறினர். பணியிலி ருந்த பலரும் ஆர்வமின்றி சோக த்துடனேயே காணப்பட்டனர்.

இதுகுறித்து இவ்விரு கட் சியினரும் கூறுகையில், ‘பணப் பிரச்சினை அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்கச் செல்வதை வாக்காளர்கள் ஏற்கவில்லை.

வாக்கு கேட்டால், பணப் பிரச்சினையைத்தான் முதலில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து எந்த கருத்தையும் எங்களால் தெரிவிக்க இயலவில்லை. பதிலளிக்கும்போது தவறான புரிதல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாக்குகள் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் கவனமாகச் செயல்படுகிறோம். ஓரிரு நாளில் இப்பிரச்சினை சரியாகும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

இதற்கிடையே, பிரதமரின் அறிவிப்பை தனது பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜக வேட்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் நேற்று தீவிரம் காட்டினார். நிலையூர், வலையங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் அவர் பிரச்சாரம் செய்தார்.

ஸ்ரீனிவாசன் பேசியது: பொருளாதார புரட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்திவிட்டார். போக்ரான் அணுகுண்டுக்கு இணையானது இந்த நடவடிக்கை. ஒரே கல்லில் 20 மாங்காய்களை அடித்துவிட்டார். இதனால் கள்ளநோட்டு, கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மட்டு மே பாதிப்பு. தொழிலதிபர்கள் முறையான வரி செலுத்துவர். வெளிநாடுகளில் இருந்து மதமாற்றம், தீவிரவாதத்துக்காக பணத்தை கொண்டுவர முடியாது. மத்திய பட்ஜெட்டிற்கு இணையான கருப்பு பணம் உள்ளது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் இந்த நிலை. பிரதமரின் நடவடிக்கையால் பயங்கரவாதம், ரவுடியிசம் ஒழியும். சட்டம், ஒழுங்கு மேம்படும். கல்விக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ரியல் எஸ்டேட் தொழில் சீரடைவதால் நிலம், வீடுகளின் விலை கணிசமாகக் குறையும்.

தேர்தல் செலவு, வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் குறையும். அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, உலக அளவில் மோடியின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.

ஏழைகளின் முன்னே ற்றத்திற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளால் 2 நாட்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் பலன் ஏழைகளுக்கு கிடைக்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி பலமடங்கு உயரும். இதை மக்கள் அனுபவப்பூர்வமாக உணர்வர். திருப்பரங்குன்றத்தில் பாஜகவிற்கு வெற்றி தேடித்தந்தால் மத்திய அரசின் திட்டப்பலன்களை நேரடி யாக இத்தொகுதிக்கு கொண்டு வருவேன் என்றார்.

No comments:

Post a Comment

Maternity leave can’t cost job or promotion on return, says HC

Maternity leave can’t cost job or promotion on return, says HC Abhinav.Garg@timesofindia.com 02.09.2026 New Delhi: Noting that maternity lea...