Tuesday, June 27, 2017

ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடு தீவிரம்

பதிவு செய்த நாள்27ஜூன்
2017
00:42


பெங்களூரு : தேர்தல் ஆணையம், வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ம் தேதி, நடக்கவுள்ளது. இதற்காக, பெங்களூரு விதான் சவுதாவின், மூன்றாவது மாடியிலுள்ள, 106வது எண் அறை, ஓட்டுச்சாவடியாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ள, லோக்சபா உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓட்டு போடலாம்.

ஓட்டுப்பதிவு நாளன்று, எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் அடையாள அட்டையை, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவரிடமிருந்து மற்றொரு அடையாள அட்டை பெற்று, ஓட்டுச்சீட்டு மூலமாக, தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும். ஓட்டுப்போடும் போது, தேர்தல் அதிகாரிகள் வழங்கும் பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...