Sunday, June 25, 2017

வேகம்!யோகியின் நடவடிக்கையால்உ.பி.,யில் வளர்ச்சி திட்டங்கள்
உ.பி.,யில், அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் அதன் நிலை குறித்து, மாநில அமைச்சர்களேநேரடியாக கண்காணித்து, அது குறித்த அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். இந்த அறிக்கையின்அடிப்படையில், பணிகளை மேலும் சீர்படுத்த, முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார்.



உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சட்ட சபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மார்ச்சில், முதல்வர் யோகி தலைமை யிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.ஆட்சி பொறுப்பேற்றது முதலே,மாநிலத்தில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும்,முதல்வர் யோகி, அரசின்திட்டங்கள் யல்படுத்தப்படுவதை, அமைச் சர்கள் நேரடியாக கண்காணித்து, அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநிலத்தில் மொத்தமுள்ள, 75 மாவட்டங்களுக்கும், பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டனர். ஒவ்வொரு அமைச்சருக் கும் தலா, மூன்று மாவட்டங்கள் ஒதுக்கப் பட்டன.'அரசு அறிவித்த திட்டங்கள், அந்த மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன; வேறு எந்த வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் நிறை, குறைகள் ஆகியவை குறித்து,

அமைச்சர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டார்.இதையடுத்து, மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, முதல்வர் உட்பட, கேபினட்அமைச்சர்கள், 25 பேரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பா.ஜ., அரசு ஆட்சிபொறுப்பேற்று, மூன்று மாதங்கள் நிறைவடைந் துள்ள நிலையில், மத்திய, மாநில அரசின் திட்டங் களின் நிலை குறித்து கண்காணித்த அமைச்சர்கள், தங்கள் முதற்கட்ட ஆய்வறிக் கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை, முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், எந்தெந்த மாவட்டத்தில், அரசு திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறதோ, அங்கு பணிகளை விரைவுபடுத்த, முதல்வர் உத்தரவிடுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.

சில மாவட்டங்களில், போதிய நிதி இல்லாத காரணத் தாலும், அரசு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அந்த பிரச்னைக்கும், விரைவில் தீர்வு கிடைக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். முதல்வர் யோகியின் அதிரடி நடவடிக்கைகளால், மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், அரசு திட்டங்களை கண்காணிக்கும் அமைச்சர்களிடம், தங்கள் குறைகள் குறித்து, நேரடியாக புகார் அளிக் கின்றனர்.இதன் மூலம், தங்களின் பலபிரச்னை களுக்கு உடனடிதீர்வு கிடைத்துள்ள தாக வும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

நம்பிக்கை அதிகரித்துள்ளது!

உ.பி.,யில், அரசு திட்டங்களின் நிலை குறித்து, மாநில அமைச்சர்கள் நேரடியாக கண்காணிப் பது குறித்து, மாநில மின் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த்

சர்மா கூறியதாவது:மாநிலத்தில், முதல்வர் யோகி தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப் பேற்ற, 50 நாட்களில், 23 ஆயிரம் வீடுகளுக்கு, புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது வரை மின் இணைப்பு பெறாத, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் பணி கள் வேகமாக நடந்து வருகின்றன. 2018 இறுதிக்குள், மாநிலத்தின் அனைத்து பகுதி களிலும் மின் இணைப்பு வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள அமைச்சர்கள், அரசு திட்டங்களை கண்காணித்து, அதன் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளித்துள்ளதால், கிடப்பில் இருக்கும் திட்டங்கள் வேகப்படுத்தப்படும்.

மத்திய அரசின் திட்டங்களை, முந்தைய சமாஜ் வாதி அரசு சிறிதும் செயல்படுத்த வில்லை. மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகை, உரிய வகையில் பயன் படுத்தப்படா மல் வீணடிக்கப்பட்டு உள்ளது. இனி, அது போன்ற நிலை இருக்காது. மக்கள், இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...