Wednesday, November 9, 2016

indian_bride


இந்தியப் பெண்களிடையே சொந்த சாதியல்லாது பிற சாதியில் வரன் தேடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?

By கார்த்திகா வாசுதேவன் 
60 சதவிகித இந்தியப் பெண்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் தங்களது சாதியை விட பிற சாதி வரன்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என ’பானிஹால்’ எனும் வரன் தேடலுக்கான இணையதளம் ஒன்று சமீபத்தில் தனது சர்வே முடிவை அறிவித்திருக்கிறது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் அறிவியல், மருத்துவம் இரண்டின் மூலமும் பொருத்தம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பானிஹால் தனது வாடிக்கையாளர்களின் திருமணப் பொருத்தங்களை நியூரோ சயன்ஸ் அடிப்படையில் பார்த்துத் பொருத்தமான வரன்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறதாம். இந்த இணையதளம் இதுவரை 6000 வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில்;
மணப்பெண்களின் எதிர்பார்ப்பு என்பது;
  • இரண்டில் ஒரு பெண் கூட்டுக் குடும்ப வாழ்வை விரும்புகிறார். அவர்களுடைய தேடல் கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து வாழத் தயாராக இருக்கும் மணமகனாகவே இருக்கிறது.
  • தோற்றத்தைக் கண்டு மயங்குவதெல்லாம் மலையேறிப் போய் விட்டது. பத்தில் ஆறு பெண்கள் திருமண வரன்களுக்கான இணைய தள சுய விவரப் பக்கத்தில் புகைப்படம் கூடப் பகிராத மணமகன்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாம்.
  • முன்பெல்லாம் மணமகன் தரப்பிலிருந்து தான் திருமணப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல இந்த இணையதளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், இவர்களது பயனாளர்களில் 40 சதவிகிதத்தினர் பெண்கள் என்பதோடு திருமணப் பேச்சு வார்த்தைகளின் போது ஆண் வீட்டாரை விட பெண் வீட்டார் தான் இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் தெளிவாகவும், ஆர்வமாகவும் ஈடுபடுகிறார்கள்.
  • அதோடு கூட இன்றைய பெண்கள் மணமகனைத் தேர்ந்தெடுப்பதில், அவரது சொத்து மதிப்பைக் காட்டிலும் அவரது கல்விக்கும், உத்யோகத்திற்கும்  முன்னுரிமை தருகிறார்கள். குறைந்த பட்சம் தங்களது வாழ்க்கைத் துணை பட்டதாரியாகவாவது இருக்க வேண்டும் எனும் விழிப்புணர்வும், எதிர்பார்ப்பும் 85 சதவிகிதப் பெண்களுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024