Sunday, June 25, 2017

போரூர் மேம்பாலம் இன்று திறப்பு; ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின் விடிவு

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
07:01




சென்னை: சென்னை போரூர் மேம்பாலம், ஏழு ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பின், இன்று திறப்பு விழா காண இருக்கிறது.

மவுன்ட் - பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமாக, போரூர் ரவுண்டானா உள்ளது. மேலும், மவுன்ட் - பூந்தமல்லி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் காணப்படும். அது மட்டுமல்லாமல், குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி தான், சென்னை நகருக்குள் செல்கின்றன. இதனால், போரூர் சந்திப்பில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

இதனால், இந்த நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், 480 மீட்டர் நீளம்; 37.2 மீட்டர் அகலம், இருபுறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. போரூர் மேம்பாலம் கட்டுவதற்கு, தி.மு.க., ஆட்சியில், 15 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான பணிகள், 2010ல் துவங்கப்பட்டன.

சுமார் 7 ஆண்டுகளாக நடந்து வந்த மேம்பால பணி பல்வேறு பிரச்னைகளுக்கு பின் தற்போது முழவதுமாக தயாராகி இன்று திறப்புவிழா காண இருக்கிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...