Sunday, June 25, 2017

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேலத்தில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

ஜூன் 25, 2017, 04:30 AM

சேலம்,

சேலத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் அடித்தது. மாலை 6 மணியளவில் வானத்தில் கருமேகம் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறி தெரிந்தது. சிறிது நேரத்தில் காற்றுடன் பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழையால் சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். சில இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.வீடுகளில் தண்ணீர் புகுந்தது

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி சரிவர இல்லாததால் மழைநீர் சாக்கடை கால்வாயை விட்டு வெளியே ரோட்டில் கழிவுநீர் கலந்து ஆறுபோல பெருக்கெடுத்தது. அத்துடன் பல இடங்களில் சாக்கடையில் குப்பைகள், பிளாஸ்டிக் தம்ளர்கள் கிடந்ததால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மழைநீருடன் வெளியேறியது. வாகன ஓட்டிகள் இந்த தண்ணீரில் மெதுவாக சென்றனர்.

சேலம் 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, கிச்சிப்பாளையம், பெரமனூர் நாராயணபிள்ளை தெரு 20 அடி ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சீத்தாராம் செட்டி ரோடு உள்பட பல்வேறு தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நகரில் 200–க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அதை பொதுமக்கள் பாத்திரங்கள், வாளி மூரம் அகற்றினர். இரவிலும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையப்பகுதி மழைநீர் வெளியேற வழியின்றி குட்டைபோல தேங்கி நின்றது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...