Sunday, June 25, 2017

பிறக்க முக்தி தரும் தலம் ‘திருவாரூர்’. இங்கு இறைவன் எந்த காலத்தில் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாத ரகசியம். அதனால் தான் திருவாரூரை ‘அந்தரகேசபுரம்’ என்கிறார்கள்.

ஜூன் 23, 2017, 06:00 AM

பிறக்க முக்தி தரும் தலம் ‘திருவாரூர்’. இங்கு இறைவன் எந்த காலத்தில் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாத ரகசியம். அதனால் தான் திருவாரூரை ‘அந்தரகேசபுரம்’ என்கிறார்கள். பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக திருவாரூர் தியாகராஜர் ஆலயம் திகழ்கிறது.

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கு இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அப்போது தனக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, தேவர்களின் தலைவன் இந்திரன், வீதி விடங்கரை பரிசாக வழங்கினான். இந்திரனிடம் இருந்து பெற்ற வீதி விடங்கர் சிலை திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவரே தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். அந்தரகேசபுரத்து அரசரும் அவர் தான். ரத்தின சிம்மாசனத்தில், வாள்படை வீரர்கள் முன் நிற்க வீற்றிருக்கும் தியாகராஜ பெருமானைப் பார்த்தாலே, அவரை அரசர் என்று போற்றுவதன் பொருள் விளங்கும்.

கொண்டி அம்மன், முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த கோலத்தில் அருள்புரியும் தியாகராஜரின் பாதங்களை, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசிக்க முடியும். ஒன்று பங்குனி உத்திரம், மற்றொன்று மார்கழி திருவாதிரை. மற்ற நாட்களில் தலை பாகத்தைத் தவிர உடல் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மார்கழி திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் வணங்கலாம். தியாகராஜரின் பாதத்தை தரிசிப்பதால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...