Sunday, June 25, 2017

இருளில் மூழ்கியிருக்கும் பாம்பன் பாலம்!

உ.பாண்டி

பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் சமீப காலங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நவீன தார்ச்சாலையால் உயிர்ச்சேதம், வாகன சேதம் போன்றவற்றால் பீதியில் மக்கள் பயணம் செய்கின்றனர்.




இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக பாம்பன் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. ஒளிரும் ஸ்டிக்கர் எதுவும் ஒட்டப்படவில்லை. இருளை கிழித்துக் கொண்டு பாம்பன் பாலத்தில் வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையில் வருவது போல் பீதியில் பயணிக்கின்றன. காவல்துறையின் பாதுகாப்பும் இல்லை. பெரிய விபத்து நிகழும் முன் அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025