Sunday, July 9, 2017

வியர்த்தால் வெளியேறுகிறது ரத்தம் அதிசய சிறுமியால் டாக்டர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
22:39



ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த, 3 வயது சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வெளியேறுவதை பார்த்து, பெற்றோர் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் ஐதராபாத்தில் வசிப்பவர், முகமது அப்சலின் மகள் அஹானா, 3. இந்த சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வந்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அஹானாவுக்கு சிகிச்சையளிக்கும், டாக்டர் சிரிஷா கூறியதாவது:

அஹானாவுக்கு, 2 வயதில், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதன்பின், வாய், காது, மூக்கு என, அனைத்து துவாரங்களில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வரத் துவங்கியது.

தற்போது, அஹானாவின் உடலின் மேல் தோலில் உள்ள வியர்வை துவாரங்களில் இருந்தும், ரத்தம் வெளியேறுகிறது. அஹானாவுக்கு, 'ஹெமடிடிரோசிஸ்' எனப்படும், அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ரத்தப் போக்கு ஏற்படுகிறது. சிகிச்சைக்கு பின், தற்போது ரத்தப் போக்கு குறைந்துள்ளது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், தன் மகளின் சிகிச்சைக்கு, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென, அப்சல் கோரிக்கை
விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...