Monday, July 3, 2017

AirIndia

தனியார்மயமாகும் ஏர் இந்தியா: எதிர்க்கும் ஊழியர்கள் சங்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசின் முடிவுக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனங்களில் முதன்மையான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், தொடர் நஷ்டத்தில் சிக்கித் தவித்துவருகிறது. கடன் சுமை தாளாமல், தன் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு நடவடிக்கையிலும் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியது. இந்தச் சம்பளக் குறைப்பு நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளான நிறுவன ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலையீட்டால் போராட்டங்கள் கைவிடப்பட்டு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டு, ஊழியர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

இந்த நிலையில், சிறிது காலத்துக்குப் பின் சம்பளம் தருவதையே ஏர் இந்தியா நிறுவனம் மறந்துவிட்டது. ஊழியர்களும் போராட்டம் நடத்தியே களைப்படைந்த வேளையில், மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்தது.

இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு முதலில் ஊழியர்கள் ஆதரவு அளிப்பர் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை முற்றிலும் மறுக்கிறது ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம். தனியார் வசம் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்படக் கூடாது என ஊழியர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென்றும் ஊழியர்களின் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024