Saturday, August 26, 2017

குடிநீர் பாட்டிலில் குச்சி இழப்பீடு தர உத்தரவு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:13


சென்னை;குடிநீர் பாட்டிலில் குச்சி கிடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த, ரவி தாக்கல் செய்த மனு:உணவு சாப்பிட, தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில், 20 ரூபாய் கொடுத்து, 'அக்குவா பாஸ்ட்' பெயரிலான குடிநீர் பாட்டில் வாங்கினேன்.சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டது. தண்ணீர் குடிக்க பாட்டிலை திறந்த போது, அதில், குச்சியோ, நாடா புழுவோ மிதப்பது போல இருந்தது.மன உளைச்சல்விக்கல் அதிகமாகி தவித்தபோது, அருகில் இருந்தவர் தண்ணீர் கொடுத்ததால், உயிர் ப்பினேன்.கடைக்காரரிடம் கேட்டதற்கு, 'விற்பதுடன் என் வேலை முடிந்தது; ஏதும், பிரச்னை என்றால் தயாரிப்பு நிறுவனத்தையே நாட வேண்டும்' என்றார். தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் செய்தும், கண்டு கொள்ளவில்லை; எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.மன உளைச்சலுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; சேவை குறைபாட்டிற்கு, இரண்டு லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக, 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உத்தரவு
வழக்கு விசாரணையின் போது, 'குடிநீர் தயாரிப்பில் குறை ஏதும் இல்லை; பாட்டிலையும் எங்களிடம் காட்டவில்லை. பணம் பறிக்கும் நோக்கில், வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த வழக்கில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித்துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபுவரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. தண்ணீர் பாட்டிலை சோதனை செய்த, கிண்டி, 'கிங்க்' ஆய்வு மையம், 'தண்ணீர் பாட்டிலில், குச்சி போன்ற ஒரு பொருள் உள்ளது. தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல' என, தெரிவித்து உள்ளது.குடிநீர் பாட்டிலை விற்ற கடைக்காரரும், தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன், வழக்கு செலவாக, 5,000 ரூபாயும் சேர்த்து, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC TNN | Aug 2, 2026, 05.17 AM IST NEW DELHI: Long and crushing working hours hav...