Saturday, August 26, 2017



ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்படும் கோதுமைக்கு, மக்களிடம் மவுசு ஏற்பட்டுள்ள தால், முழு அளவில் சப்ளை செய்யுமாறு, ஊழியர்கள், அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட் டவை குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன. ஒரு கிலோ கோதுமை விலை, 7.50 ரூபாய்.ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, சென்னை
மற்றும் மாவட்ட தலைநகரங்களில், மாதம் தோறும், 10 கிலோ; மற்ற பகுதிகளில், ஐந்து கிலோ கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத் தில், 2016 நவ., மாதம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டது.

அரிசி பெறும் கார்டுதாரர்கள், தங்கள் விருப்பத்தில், அரிசிக்கு மாற்றாக, பாதி அளவுக்கு கோதுமையை இலவசமாக பெற்று கொள்ளலாம் என, உணவுத் துறை அறிவித்தது. அதன்படி, 25 கிலோ இலவச அரிசி பெறும் ஒரு கார்டுதாரர், விருப்பத்தின்படி, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையை வாங்கி கொள்ளலாம். தற்போது, ரேஷனில் கோதுமை வாங்குவோர் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கோதுமைக்கு விலை இருந்த போது, சிலர் மட்டுமே வாங்கினர். தற்போது,இலவசமாக தருவதால், அரிசி வாங்காதவர்கள் கூட, கோதுமை கேட்கின்றனர். ஆனால், 1,000 கார்டுகள் உள்ள, ஒரு கடைக்கு, 400 - 500கார்டுகளுக்குமட்டுமே கோதுமை அனுப்பப்படுகிறது.இதனால், அனைவருக்கும் கோதுமை சப்ளை செய்ய முடிய வில்லை. எனவே, கிடங்குகளில் இருந்து, முழு அளவில் கோதுமை சப்ளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC TNN | Aug 2, 2026, 05.17 AM IST NEW DELHI: Long and crushing working hours hav...