Wednesday, December 7, 2016

எதைக் கண்டும் அஞ்சாதவர் 'சோ'- மோடி புகழஞ்சலி

சோ | மோடி

'சோ' ராமசாமி எதைக் கண்டும் அஞ்சாத உறுதி படைத்தவர் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ''சோ சிறந்த தேசியவாதி, அறிவுக்கூர்மை வாய்ந்தவர், பன்முகத்தன்மை கொண்டவர். அச்சமில்லாமல் பேசும் உறுதி படைத்தவர். வெளிப்படையான தன்மை கொண்ட புத்திசாலி.

இவை அனைத்துக்கும் மேலாக அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.

சோ ராமசாமியின் குடும்பத்துக்கும், அவருடைய துக்ளக் பத்திரிகை வாசகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...