Wednesday, December 7, 2016

இந்திய அரசியலில் உன்னத தலைவி: மாநில முதல்வர்கள் இரங்கல்

ஜெயலலிதா | கோப்புப் படம்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நாடு முழுவதும் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய அரசியலில் மிக உன்னதமான தலைவி என, ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி:

தங்களின் பாசத்துக்குரிய அம்மாவை இழந்து வாடும் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் துயரத்தில் காங்கிரஸ் கட்சியும், என் குடும்பமும், நான் தனிப்பட்ட முறையிலும் பங் கெடுத்துக்கொள்கிறேன்.

அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக் கங்களை சந்தித்த ஜெயலலிதா திட மான மன உறுதியுடன், தனது மிகச் சிறந்த நிர்வாகத் திறமையின் மூலம் தேசிய அரசியலில் உன்னத தலை வராக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் வீழ்த்த முடியாத வீரத்துடன் சவால்களை கடைசி காலத் திலும் அதே போராட்டத்தை முன்னெடுத் தார்.

காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி:

மிகப் பெரும் தலைவரை நாம் இழந்துவிட்டோம். பெண்கள், விவ சாயிகள், மீனவர்கள், நலிந்த பிரிவினர் அவரின் கண்களின் மூலமாக கனவு கண்டனர்.

காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி:

மக்களுக்காக போராடிய மக்கள் தலைவர் ஜெயலலிதா. நாட்டில் படித்த, அறிவார்ந்த அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி:

தமிழ் சினிமாவின் ராணியாக இருந்து, தனது அளப்பரிய தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியால் அரசியலில் தனக் கென தனி பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா.

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்:

நிகரில்லாத நிர்வாகத் திறமை களைக் கொண்ட, தனித்துவமிக்க அரசி யல்வாதியான ஜெயலலிதா, சமகால இந்தியாவில் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் தலைவராக திகழ்ந்தவர்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்:

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் மதிப்புக்குரிய தலைவர். பெண்கள் முன்னேற்றத்தின் அடை யாளமாக அவர் திகழ்ந்தார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்:

கவர்ந்திழுக்கும் தலைமைப் பண்பு கொண்ட ஜெயலலிதா தமிழ கத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத் துச் சென்றவர். மக்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மிகவும் வலு வானது. அவருக்கு மாற்று வேறு யாருமில்லை.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்:

ஜெயலலிதாவின் மறைவு, தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பு. நடிகை யாக இருந்து, எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக உருவெடுத்த ஜெயலலிதா வின் வாழ்க்கை மற்றவர்களுக்கு உத் வேகம் அளிக்கக்கூடியது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அரிதாக இருந்த காலத்தில், அரசியலுக்குள் பிர வேசித்து, சவால்களை எதிர்கொண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் மாறி, புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்:

ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. புகழ் பெற்ற மிகப் பெரிய தலைவரான அவரின் மறை வுக்கு கோவா மாநிலம் சார்பில் இரங்கல் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அருணாச்சல் பிரதேச முதல்வர் பேமா காண்டு:

அனைவரையும் கவரும் வகையில், மிக செல்வாக்கான, அர்ப் பணிப்புணர்வுடன் கூடிய தலைவர்களில் ஒருவராக ஜெயலலிதா திகழ்ந்தார். பூத உடலின் இறப்பால் அவரின் புகழும், ஏழைகள் மீது அவர் வைத்த அன்பும் என்றும் அழியாது என நம்புகிறேன்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி:

தென்னிந்தியாவின் ஒவ்வொரு குடி மகனின் இதயத்திலும் ஜெயலலிதாவுக்கு தனி இடம் உண்டு. அவரின் இழப்பு, அதிமுகவுக்கு மட்டுமின்றி, அனைத்து தமிழக மக்களுக்கும் வேதனை அளிப்பதாக இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024