Wednesday, December 7, 2016

புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த பாதை

ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம்

தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கடந்து வந்த அரசியல் பாதை:

பள்ளிப் படிப்பை தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப் பள்ளியில் படித்தார். பியுசி மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும், பி.ஏ பட்டப் படிப்பை உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுரியிலும் முடித்தார்.

அதன் பின்னர் பெரியகுளத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தபோது அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டு அதிமுகவில் உறுப்பினர் ஆனார். எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் கட்சி இரண்டாக உடைந்தபோது கடந்த 1989-ம் ஆண்டு (அதிமுக) ஜானகி அணியில் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார். 91-ம் ஆண்டு பெரியகுளம் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராகவும், 1999-ம் ஆண்டு தேனி மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இதற்கிடையில் 1991-ம் ஆண்டு பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கியில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தார். 2001-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்ஏல்ஏவாகி மே மாதம் முதல் 2001-ம் ஆண்டு செப்டம்பர் வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது இவர் 2001-ம் ஆண்டு செப், 21-ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் வரை பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். 2011-ம் ஆண்டு போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சரானார்.

பின்னர் 2014-ம் ஆண்டு செப். 29-ம் தேதி முதல் 2015 மே 22-ம் தேதி வரை 2-வது முறையாக முதலமைச்சராக இருந்துள்ளார். 2016-ம் ஆண்டு மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட்டு நிதி அமைச்சரானார். முதலமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல மைச்சர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாக்காக்கள் இவரிடம் ஒப்படைக் கப் பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 3-வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024