Wednesday, December 7, 2016

விமர்சித்துவிட்டும் நட்பை தொடர்பவர் 'சோ'- சிவகுமார் புகழஞ்சலி



இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ என்று சிவகுமார் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோ மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் சிவகுமார். அவருடன் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "அரசியலிலோ, ஆட்சி அதிகாரத்திலோ எந்த ஒரு பதவியும் வகிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடைய நன்மதிப்பையும் பெற்றவர் சோ. பாராட்டு, புகழுரை, பொன்னாடை என்றால் ஒடி ஒளிந்து கொள்வார்.

தனக்கு சரி என்று தோன்றினால், எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் கவலைப்படாமல் துணிந்துச் சொல்லக்கூடிய ஒரு மனிதர். இவர் கடுமையாக யாரை எல்லாம் விமர்சித்தாரோ, அவர்கள் அனைவரும் கடைசி மூச்சு வரைக்கும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

பலர் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்த போது, முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கான பொறுமை எனக்கு இல்லை என்று ஒதுங்கிவிட்டார். சோ உணர்ச்சிவசப்பட மாட்டார். கண்ணீர் விடமாட்டார்" என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024