Friday, August 11, 2017

சுமையாக விரும்பாமல் தம்பதி தற்கொலை
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


அவிநாசி: வசதியிருந்தும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாத முதிய தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதியப்பன், 90; மனைவி வள்ளியம்மாள், 86. இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மகன்களில் ஒருவர், ஊட்டியிலும், ஒருவர், திருப்பூரிலும், குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆட்டோ உரிமையாளரான, இளைய மகன் குமாரசாமியுடன், கணபதியப்பன், வள்ளியம்மாள் இருவரும், சீனிவாசபுரம் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், வள்ளியம்மாள் தவறி விழுந்து, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கணபதியப்பனும், நீண்ட நாளாக மூட்டு வலியால், நடக்க சிரமப்பட்டு வந்தார். குமாரசாமி, பெற்றோருக்கு காலை காபி, டிபன் கொடுத்து செல்வது வழக்கம்.

நேற்று காலை, அவர், காபியுடன் பெற்றோரை எழுப்ப சென்ற போது, இருவரும், மயங்கி கிடந்தனர். அருகே காலி விஷ பாட்டில் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலனசில், இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்; பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வயதான காலத்தில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாமல், வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...