இட்லி சாப்பிடும் போட்டியில் பலி
Added : ஜன 18, 2018 01:53
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, பாண்டிக்குடி கல்லிச்சியம் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு, பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிக எண்ணிக்கையில் இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த, சமையல் ஏஜன்ட் சின்னதம்பி, 45, என்பவரும் பங்கேற்றார். வேகமாக இட்லி சாப்பிட்ட போது, இட்லி தொண்டையில் அடைத்து கொண்டதால், மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
No comments:
Post a Comment